Monday, 2 November 2015

சத்தியப் பாதையில் சோதனைகளை வென்று நிலைத்திருப்பார்கள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

   இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள்.
என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
புகாரி - 3640.
யா அல்லாஹ் ! குப்ரைவிட்டும், வறுமையை விட்டும் கப்ருடைய வேதனையை விட்டும் உன்பால் பாதுகாவல் தேடுகிறோம் ! நல்வழியையும் பயபக்தியையும் , தூய எண்ணங்களையும் செல்வங்களையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ சத்தியப் பாதையில் சோதனைகளை வென்று நிலைத்திருப்பார்கள்! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program