Sunday, 31 March 2013

சுவர்க்கத்தை நோக்கி…



இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் - 3:133)

மேலும் வாசிக்க

Sunday, 31 March 2013 by Unknown · 0

Saturday, 30 March 2013

நபிவழியை புறக்கணிக்காதீர்கள்!



முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்ஆன் - 8:20)

(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.(அல்குர்ஆன் - 6:106)

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
(அல்குர்ஆன் 2:130)

மேலும் வாசிக்க

Saturday, 30 March 2013 by Unknown · 0

Thursday, 28 March 2013

வெள்ளிக் கிழமை

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவேஅந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல்: அபூதாவூத் 883.

Thursday, 28 March 2013 by Unknown · 1

கலீபா உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) (586-644)


கலீபாக்களில் இரண்டாமவரும் நான்கு கலீபாக்களில் முக்கியமானவரும் ஆவார். எல்லாம் வல்ல வணக்கத்திற்குரிய ஏக இறைவனான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வயதில் இளையவரான உமர் (ரலி) அவர்கள் மக்காவிலே பிறந்தார். அன்னார் பிறந்த ஆண்டு சரியாக அறியப்படவில்லை. அனேகமாக கி.பி 586 ஆம் ஆண்டாக இருக்கலாம்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Wednesday, 27 March 2013

பிளாக்கரில் லேபில்(Label) பக்கத்தில் தெரியும் செய்தியை நீக்க

பிளாக்கரில் பதிவு எழுதும் நாம் அனைவரும் நம் பதிவுகளை பிளாக்கரில் உள்ள label வசதியின் மூலம் தனி தனி வகைகளாக பிரித்து இருப்போம். உதாரணமாக சினிமா என்றால் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை சேமிப்போம் தொழில் நுட்பம் என்றால் அது சம்பந்தமான பதிவுகளை சேமிப்போம் இப்படி நிறைய லேபிள்களை உருவாக்கி அதில் நம் பதிவுகளை தனித்தனி வகைகளாக பிரித்து சேமித்து இருப்போம். இதில் என்ன பிரச்சினை என்றால் நாமோ அல்லது நம் தளத்திற்கு வரும் வாசகர்களோ இந்த லேபிள்களை ஓபன் செய்தால் நம் பதிவுகளுக்கு மேல் ஒரு சிறிய கட்டத்தில் ஒரு செய்தி வரும். அது பார்ப்பதற்கும் அழகற்று இருக்கும். ஆகவே அதை எப்படி நம் பிளாக்கரில் வராமல் நீக்குவது என கீழே காண்போம்.

மேலும் வாசிக்க

Wednesday, 27 March 2013 by Unknown · 0

நற்செயல்கள்


நற்செயல்கள்:

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.
(அல் குர்ஆன் – 11:114)

நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.(அல் குர்ஆன் – 16:128)

'எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்' (என்று கூறினோம்).
(அல் குர்ஆன் – 20:82)

மேலும் வாசிக்க

by Unknown · 0

பிளாக்கரில் Email Subscribe, Social networks, Feed count அனைத்தும் ஒரே விட்ஜெட்டில் இணைக்க

பிளாக்கரில் Email Subscribe, Social networks, Feed count அனைத்தும் ஒரே விட்ஜெட்டில் இணைக்க

நாம் பிளாக்கரில் பல்வேறு வசதிகளை விட்ஜெட்களாக உருவாக்கி பிளாக்கரில் இணைத்து  இருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் ஒரு பயனுள்ள விட்ஜெட்டை எப்படி பிளாக்கரில் இணைப்பது என பார்ப்போம். இந்த Subscribe விட்ஜெட்டில் ஈமெயிலில் பதிவு செய்யும் வசதி மட்டுமின்றி சமூக தளங்களின் பட்டன்களும் சேர்த்து உள்ளது. அது மட்டுமில்லாமல் எத்தனை பேர் ஈமெயில் வாசகர்களாக உள்ளனர் என காட்டும் Feed Count பட்டனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆக Email Subscribe, Social Networks, Feed Count என அனைத்தும் ஒரே விட்ஜெட்டில் இருப்பதால் இதற்க்கு என தனித்தனி விட்ஜெட் வைக்க தேவையில்லை.

மேலும் வாசிக்க

by Unknown · 0

பீட்பர்னர் உதவியுடன் பிளாக்கர் பதிவுகளை ட்விட்டரில் Auto Publish செய்ய


ஒவ்வொரு பதிவரும் விரும்புவது அவர்களின் பதிவுகள் பெரும்பாலனவர்களை சென்றடைய வேண்டுமென்பதே. ஆதலால் நம் பதிவுகளை திரட்டிகளிலும், சமூக தளங்களிலும் இணைக்கிறோம். இந்த சமூக தளங்களில் பிரபலமான தளமான ட்விட்டர் தளத்திலும் நம் பதிவுகளை இணைக்கிறோம். பதிவு போட்டு ஒவ்வொரு முறையும் இதில் இணைக்க வேண்டியதாக உள்ளது. இதை மாற்றி நாம் பதிவு போட்டவுடன் ட்விட்டரில் தானாகவே அப்டேட் ஆகும் படி செய்வது என பார்ப்போம்.

இதற்க்கு பல தளங்கள் இருந்தாலும் கூகுளின் தளமான பீட்பர்னரின் உதவியுடன் எப்படி ஆட்டோ பப்ளிஷ் செய்வது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

பேஸ்புக்கில் டேக் செய்வதை தடுக்க ...



பேஸ்புக்கில் பிறர் நம்மை டேக் செய்வதை தடுப்பது எப்படி? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதில், "தடுக்க முடியாது" என்பது தான். ஆனால் நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் நம் அனுமதி இல்லாமல் நம் டைம்லைனிலோ, நண்பர்களுக்கோ தெரியாமல் செய்ய வைக்கலாம்.

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account Settings என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே இடதுபுறம் Timeline and Tagging என்பதை க்ளிக் செய்யுங்கள்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

பேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்க

ஃபேஸ்புக் பற்றி அறியாத இணைய பயன்பாட்டாளர்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள்.புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் தகவல்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள கொள்ள பயன்படுகிறது.
தற்போது ஃபேஸ்புக் தளம் தனது போட்டியாளரான கூகுளினை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட்டது. தற்போது உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது.
இந்த தளத்தில் பகிரப்படும் பகிர்வுகள் பல தவறானவைகளாகவே உள்ளது. மேலும் ஆபாசமான செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறன. அதற்கும் மேலாக நம்முடைய சுயதகவல்கள் திருடப்படுகிறன என்பது மிகவும் வருத்தம் அளிக்ககூடிய ஒன்றாக உள்ளது.

மேலும் வாசிக்க

by Unknown · 0

பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட்ஜெட்டில் இணைக்க


பதிவுகளை பிரபல படுத்த நாம் பல முறைகளை கையாளுகிறோம். முக்கியமானது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது இன்னொன்று சமூக இணைய தளங்களில் இணைப்பது. இந்த தளங்களின் ஓட்டு பட்டைகளை ஏற்க்கனவே பிளாக்கில் இணைத்து இருப்போம். ஆனால் அவைகளை தனித்தனியே இணைத்து இருப்போம் ஆதலால் அவை ஒழுங்கற்று இருக்கும். ஆகவே பிரபல சமூக தளங்களின் ஓட்டு பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.


மேலும் வாசிக்க

by Unknown · 0

Monday, 25 March 2013

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க


உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

மேலும் வாசிக்க

Monday, 25 March 2013 by Unknown · 0

Sunday, 24 March 2013

தடை செய்யப்பட்ட செயல்கள்


(நபியே!) நீர் கூறுவீராக: 

வாருங்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு எதைத் தடை செய்துள்ளான் என்பதைச் சொல்லிக்காட்டுகிறேன். 
(அதாவது) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது. 
பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும். 
வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யக் கூடாது.
உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அப்பட்டமான (அல்லது) மறைமுகமான எந்த மானக்கேடான செயல்களையும் நெருங்காதீர்கள்.
அல்லாஹ் புனிதப்படுத்திய எந்த உயிரையும் தகுந்த காரணமின்றிக் கொலை செய்யாதீர்கள்.
இதையே அவன் உங்களுக்கு அறிவுரையாகக் கூறுகின்றான்.
(இதனால்) நீங்கள் விளக்கமுடையோர் ஆகலாம்.

அல்அன்ஆம் 6:151

Sunday, 24 March 2013 by Unknown · 0

மாற்ற நினைத்தேன் மாறி விட்டேன்

"மாற்ற நினைத்தேன், மாறி விட்டேன்"

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

மேலும் வாசிக்க

by Unknown · 2

Saturday, 23 March 2013

தீன்குலப் பெண்ணே!


அன்பிற்குரிய தாய்மார்களே! சகோதரிகளே! பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு தொகுத்துள்ளோம். இதனைக் கடைபிடித்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நாம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். இவ்வுலகக் செல்வங்களில் மிகவும் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம் 2668)

வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும்
தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)

மேலும் வாசிக்க

Saturday, 23 March 2013 by Unknown · 0

நன்றி


நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் வசிப்பிடத்தை வழங்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம். (எனினும்,) நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

அல் அஃராஃப் 7 : 10

by Unknown · 0

பாவமன்னிப்பு


”எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி),
நூல் : முஸ்லிம் 4870.

”மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Friday, 22 March 2013

மறுமை வெற்றி யாருக்கு..?


நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அல்குர்ஆன் 23:1)


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 
(அல்குர்ஆன் 3:104)

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)

மேலும் வாசிக்க

Friday, 22 March 2013 by Unknown · 0

சகோதரன்

ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம் 5010)

by Unknown · 0

புறம் பேசுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

புறம் பேசுதல் என்றால் என்ன என்றங்களுக்கு தெரியுமா? அதற்கு அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்றோம். அதற்கு அவர்கள் உங்களது சகோதரர் வெறுக்கும் வண்ணம் அவரைப் பற்றி பேசுவதாகும் என்றார்கள். அவரிடம் இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால் என்னவாகும் என்று கேட்கப்பட்டதற்கு 'அது அவரிடம் இருந்தால் நீ புறம்பேசியவனாவாய்; அது அவரிடம் இல்லாத பட்சத்தில் அவதூறு பேசியவனாவாய்' என்றார்கள். - முஸ்லிம் 6265, 2589.

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.49:12. 

மேலும் வாசிக்க

by Unknown · 0

Thursday, 21 March 2013

ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை)



”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)

மேலும் வாசிக்க

Thursday, 21 March 2013 by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program