Thursday, 20 August 2015
பால்கனியில் பசுமைக்குடில்!

ஆண்டு முழுவதும் தரமான காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் முழுமையாக அறுவடை செய்ய முடியாது. குறிப்பாக, வெயில் கொளுத்தும் கோடை, அடைமழை, பனிக் காலங்களில் மகசூல் பாதிப்பு இருக்கும். இதைத் தடுக்க, மொட்டை மாடியில் பசுமைக்குடில் அமைக்கலாம். சந்தையில் கிடைக்கும் உபகரணங்களைக் கொண்டு குறைந்த செலவில் நாமே அமைத்து விடலாம். 10 அடி நீளம், 10 அடி அகலம், ஆறரை அடி உயரம் கொண்ட 100 சதுர அடி பரப்பில், சுமார் 30 பைகள் வைத்து, அதில் காய்கறிச் செடிகளை வளர்க்கலாம். . இது, வெளியில் இருந்து வரும் பூச்சிகளைத் தடுப்பதுடன், நீர் ஆவியாவதையும் கட்டுப்படுத்துகிறது. சீரான வளர்ச்சியைப் பெறுவதால் திறந்த வெளித்தொட்டிச் செடிகளை ஒப்பிடுகையில், பசுமைக்குடில் செடியில் நான்கு மடங்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.
மஞ்சள் வண்ணம் மகசூல் திண்ணம்!
செடிகளில் ஏற்படும் ஆரம்ப கட்ட பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த... 5 கிலோ வேப்பிலையைக் கசக்கி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்த கரைசலை செடிகளின் மீது தெளிக்கலாம். இது, அசுவிணி, சாறு ஊறிஞ்சும் பூச்சி போன்றவற்றைத் தடுக்கும்.
காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த... மிளகு, பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து, அரைத்து அரைப்பங்கு தண்ணீரில் கலந்து அதிகாலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த... மிளகு, பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து, அரைத்து அரைப்பங்கு தண்ணீரில் கலந்து அதிகாலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
வடிகட்டிய காபித்தூளை செடிகளுக்கு உரமாக போட்டால், அந்த வாசம் பூச்சிகளை விரட்டுவதுடன் செடிகளுக்கு நல்ல உரமாகவும் விளங்கும். இலைகளை அரிக்கும் ஒருவகைப்பூச்சிகளால் பச்சையம் சுரண்டப்பட்டு இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகி விடும். இதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. செடிகளால் உணவு தயாரிக்க முடியாமல் வாடிப்போகும். இப்படி பாதிக்கப்பட்ட இலைகளின் மீது மிளகுத்தூளை லேசாக தூவினால் இந்தப்பிரச்னை சரியாகும்.

காய்கறிச் செடிகளுக்கு இடையில் சில தொட்டிகளில் மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்ட செண்டுமல்லிப்பூச் செடிகளை வைக்கவேண்டியது அவசியம். மஞ்சள் நிறத்துக்கு பூச்சிகளை ஈர்க்கும் தன்மை உண்டு. ஆங்காங்கே ஜொலிக்கும் செண்டுமல்லிப் பூக்களைத் தேடி வரும் பூச்சிகள் அதன் வண்ணத்திலும், வாசனையிலும் மயங்கி அந்தத் தொட்டிகளிலேயே தங்கிவிடும். பக்கத்தில் உள்ள காய்கறிச் செடிகளை சேதாரம் செய்யாது. இந்த வகையிலும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
மூலிகை இருந்தால், மருத்துவம் தேவையில்லை!
எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது மூதாதையர் வாக்கு. ‘மனைக்குள் மூலிகை இருந்தால் மருத்துவம் தேவையில்லை’ என்று அதை மாற்றி சொல்லலாம். கீரை, காய்கறிகள், கிழங்குகளோடு மூலிகைகளையும் வீட்டுத்தோட்டத்தில் பயிர் செய்துவருகிறார்கள் கிருத்திகா கனகராஜ் தம்பதி. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு முதல் உதவி மருத்துவத் தேவைக்காக கைகொடுப்பது தோட்டத்தில் வளர்ந்து வரும் மூலிகைச் செடிகளே. இந்த மூலிகைகள் பற்றியும், அதன் மருத்துவ குணங்களை பற்றியும் பேசினார்கள்.
“தூதுவளை, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, பிரண்டை, வெற்றிலைனு தொட்டிக்கு ஒரு செடி வீதம் வளத்துட்டு வர்றோம். சளி, தொண்டை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துறதுக்கு இத பயன்படுத்துறோம். இவையெல்லாம் 6 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒருவகையான தாவரங்கள். கொடிகளை வெட்டி அப்படியே நடவு செய்யலாம். நடவு போட்டு 45-வது நாளில் இதன் இலைகளை பயன்படுத்தலாம். இலைகளை ரசம் வைத்து சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணங்கள் கிடைக்கும்’’என்றனர்.
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105762
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105762
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பால்கனியில் பசுமைக்குடில்! ”
Post a Comment