Monday, 30 September 2013

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.

மேலும் வாசிக்க

Monday, 30 September 2013 by Unknown · 0

Sunday, 29 September 2013

பிராத்தனைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7.

மேலும் வாசிக்க

Sunday, 29 September 2013 by Unknown · 0

Friday, 27 September 2013

ஈமான் கொண்டவர்கள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

மேலும் வாசிக்க

Friday, 27 September 2013 by Unknown · 0

Thursday, 26 September 2013

வெற்றியாளர்கள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.

23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

மேலும் வாசிக்க

Thursday, 26 September 2013 by Unknown · 0

Tuesday, 24 September 2013

அல்லாஹ் மிக்க மேலானவன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

23:91. அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவைகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.

மேலும் வாசிக்க

Tuesday, 24 September 2013 by Unknown · 0

Monday, 23 September 2013

விசுவாசிகள் - 1

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

23:80. அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

மேலும் வாசிக்க

Monday, 23 September 2013 by Unknown · 0

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''


குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

 குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும். 

மேலும் வாசிக்க

by Unknown · 0

நன்மைகளின் பக்கம் வாருங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

23:57. நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
23:58. இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-
23:59. இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-
23:60. இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
23:61. இ(த்தகைய)வர்கள் தாம்

நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
23:62. நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Saturday, 21 September 2013

உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம் தான்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.

23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.

23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

மேலும் வாசிக்க

Saturday, 21 September 2013 by Unknown · 0

Friday, 20 September 2013

விசுவாசிகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 



இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!    

23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
23:4. ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

மேலும் வாசிக்க

Friday, 20 September 2013 by Unknown · 0

Thursday, 19 September 2013

பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!   

110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

மேலும் வாசிக்க

Thursday, 19 September 2013 by Unknown · 0

Wednesday, 18 September 2013

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்


பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமொழி.

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது அதனுடன் தினமும்  7 மிளகை கடிக்காமல் அப்படியே சாப்பிட்டு வந்தால்... தைரியமாக எதிரி வீட்டில் கூட சாப்பிடலாம். அதாவது.... விஷத்தை முரிக்ககக் கூடிய குணம் உண்டு மிளகுக்கு.

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. தவிர
உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கிஉடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள விடத்தைப் போக்குவது.

விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை,மிளகாய் இலைதுளசியிலைஇலவங்கம்இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.
பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள்கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலைதழுதாழை இலைநொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி,அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.
தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டுஅதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
மிளகு, அபினிபொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து மணி நேரத்திற்கு மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.
பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம்எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்துகடுகளவு மாத்திரையாகச் செய்து காலை,மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம்உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.
சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.
மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல்ஈறுவலிஈற்றிலிருந்து ரத்தம் வடிதல்வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.
மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.
மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும்இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட மாதத்தில் நீரிழிவு குணமாகும்.
வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.
அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம்தலை பாரம்தலைவலி தீரும்.

source: 
http://bakrudeenali.blogspot.in/2013/06/blog-post_17.html

Wednesday, 18 September 2013 by Unknown · 0

பயனுள்ள தளங்கள்

usefull webs அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம். நீங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.
1 . PRINT WHAT YOU LIKE << Click
நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Tuesday, 17 September 2013

வீட்டிலேயே தயாரிக்கலாம் உரம்!

வீட்டுத் தோட்டம் பற்றி பேசிய 'சுற்றுச்சூழல் நிபுணர்' சுல்தான் அகமது இஸ்மாயில், வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி பற்றி சொன்ன விஷயங்கள் இங்கே...
''ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்... கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்... என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

மேலும் வாசிக்க

Tuesday, 17 September 2013 by Unknown · 0

வறட்சியைச் சமாளிக்கும் வாய்க்கால்கள்... ஆட்கள் பிரச்னைக்கு அருமையான தீர்வு...(தென்னந்தோப்பு)

''ஒரு சிறு விதைதான்... மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறது. இயற்கை விவசாயம் என்கிற விதையை, விவசாயிகளின் மனங்களில் பசுமை விகடன் பரவலாகத் தூவியதால்தான்... இன்றைக்கு பல விவசாயிகள் செலவுகளைக் குறைத்து, நஷ்டத்தைத் தவிர்த்து நல்ல வருமானத்தோடு வாழ்கிறார்கள். அதற்கு நானே ஓர் உதாரணம்''
-இது, தஞ்சாவூர் மாவட்டம், மூத்தாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் வாக்குமூலம். பட்டுக்கோட்டை, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டே... விவசாயத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருபவர்!
இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!
7ம் ஆண்டு சிறப்பிதழுக்காக ராஜேந்திரனைச் சந்தித்தபோது...
''இது வண்டலும் மணலும் கலந்த பூமி. எங்க குடும்பத்துக்குச் சொந்தமான இந்த பதினெட்டரை ஏக்கர் தென்னந்தோப்புல 25 அடி இடைவெளியில நடப்பட்ட 1,250 தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே 25 வயசுக்கு மேலான மரங்கள். ரசாயன விவசாயம் பண்ணிட்டு இருந்தப்ப, காண்டாமிருக வண்டு, கூன்வண்டு தாக்குதலால மரத்துல சாறு வடிஞ்சு, வருஷத்துக்கு 15 மரங்களுக்கு மேல பாதிப்பாயிடும். அதை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில மோனோகுரோட்டோபாஸ் கட்டுவோம்.
ஆனா, எந்தப் பலனும் இருக்காது. இதுபோக, சூப்பர்-பாஸ்பேட், யூரியா, பொட்டாஷ், ஜிப்சம்னு வருஷத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணிக்கிட்டு இருந்தோம். பணம்தான் விரயமாச்சு... பலன் கிடைக்கல.
விரக்தியா இருந்த நேரத்துலதான் பசுமை விகடன் அறிமுகமாச்சு. அதுல வரக்கூடிய கட்டுரைகளைத் தொடர்ந்து படிச்சதுனால, இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை வந்துச்சு. இதுமட்டுமில்லாம, நம்ம விவசாயிகளே, விஞ்ஞானிகளா மாறி, புதுசு புதுசா அறிமுகப்படுத்துற தொழில்நுட்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்தினதோட, ஒரு உத்வேகத்தையும் உருவாக்கிச்சு.
பசுமை விகடனை பாடப் புத்தகமாகவும், நம்மாழ்வாரை வகுப்பாசிரியராவும் நினைச்சுக்கிட்டு... இயற்கை விவசாயத்துல துணிச்சலோட இறங்கினேன். ரெண்டு வருஷமா ரசாயன உரங்களை முழுமையா தவிர்த்துட்டு, மாட்டு எரு மட்டும் கொடுத்தேன். வண்டு தாக்குதல் படிப்படியா குறைஞ்சு, இப்ப முழுமையா சரியாயிடுச்சு'' என்று சொல்லி அதிசயித்தவர், தன்னுடய தனித்துவமான நீர்ப்பாசன முறை குறித்து பேசத் தொடங்கினார்.
செலவை கூட்டிய ரசாயனம்!
''தென்னைக்கு நிலம் முழுக்க தண்ணீர் பாய்ச்சுறதுதான் பொதுவான வழக்கம். ஒரு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் நானும் அப்படித்தான் பண்ணிகிட்டு இருந்தேன். தொடர்ச்சியா 12 மணி நேரம் தண்ணி பாய்ச்சினாதான், ஒரு ஏக்கருக்கு முழுசா பாயும். வாரம் ஒரு முறை இது மாதிரி பாய்ச்சியாகணும். பதினெட்டரை ஏக்கருக்கு தண்ணி பாய்ச்சுறதுங்கறது லேசுபட்ட வேலை இல்ல. மோட்டார் தேய்மானம், தண்ணி விரயம், ஆள் செலவுனு நிறைய பிரச்னை. இதையெல்லாம்விட நிலம் முழுக்க தண்ணி பாயுறதுனால, மண்ணு இறுகிப் போயி, கெட்டியாகி, காற்றோட்டம் தடைபடும். களைகளும் அதிகமா மண்டும். இதனால வருஷத்துக்கு நாலுமுறை உழவு ஓட்டியாகணும். இதுக்கு ஏக்கருக்கு 1,800 ரூபாய்னு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவாகும்.
செலவைக் குறைக்கும் வாய்க்கால் பாசனம்!
இதையெல்லாம் தவிர்க்கத்தான், ரெண்டு தென்னை வரிசைக்கு நடுவே கிழக்குமேற்காகவும், வடக்குதெற்காகவும் 3 அடி அகலத்துக்கு வாய்க்கால் அமைச்சேன். கால் அடி ஆழத்துக்கு மண்ணை எடுத்து, அதை பக்கவாட்டுல போட்டதுனால, வாய்க்காலோட மொத்த உயரம் அரையடியா அமைஞ்சது. இங்க உள்ள வாய்க்கால்கள் அனைத்துமே ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்புல இருக்கு. எங்கயாவது ஒரு இடத்துல திறந்தாலே எல்லா வாய்க்கால்லயும் தண்ணி பாயும். உணவு மற்றும் தண்ணி சேகரிக்கும் நுனிவேர்கள் இந்த பகுதியிலதான் இருக்கும். தென்னையை பொறுத்தவரை அடித்தூருக்கு தண்ணித் தேவையில்லை... வேருக்குதான் தேவை. தண்ணி இருக்கும் இடத்தை நோக்கி வேர்கள் ஓடி வர்றதுனால, இதோட நீளம் அதிகமாகி, மரம் நல்லா செழிப்பாகும். இதனால மட்டைகளோட நீளமும் அதிகரிச்சு, மகசூல் கூடுது.
எரு, தென்னைமட்டைனு அனைத்தையும் வாய்க்கால்லயே போட்டு தண்ணி பாய்ச்சுறதுனால, நல்லா மக்கி உரமாயிடுது. இதனால மரத்துக்கு மரம் உரம் வைக்குற ஆள் செலவு மிச்சமாகுது. வருசத்துக்கு ஒரு தடவை, குறிப்பா, மழைக்காலம் தொடங்கறதுக்கு முன்ன... 500 ஆடுகளை வெச்சு ஏக்கருக்கு ரெண்டு நாள் கணக்குல கிடை போடுவோம். இதைத் தவிர வேற எந்த பராமரிப்பும் செய்றதில்ல. இப்ப எந்த பிரச்னையுமில்லாம மரங்கள் அருமையா காய்ச்சுகிட்டு இருக்கு.
12 ஆயிரம் காய்கள் அதிகம்!
ரசாயன விவசாயம் செஞ்சப்ப வருஷத்துக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் காய்கள்தான் கிடைக்கும். இயற்கைக்கு மாறின பிறகு, கூடுதலா 12 ஆயிரம் காய்கள் கிடைச்சிருக்கு. காய்களும் நல்ல திரட்சியா இருக்கு. ரசாயன விவசாயத்தால நஷ்டத்தையும், மனக்கஷ்டத்தையும் அனுபவிச்சுகிட்டு இருந்த என்னை இன்னிக்கு லாபகரமான விவசாயியா மாத்தின பசுமை விகடனை என்னிக்கும் மறக்க மாட்டேன்'' என நன்றியோடு விடை கொடுத்தார்.
தொடர்புக்கு, 
ராஜேந்திரன்,  செல்போன்: 94435-49056
source: பசுமை விகடன்.
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=28936

by Unknown · 0

பொறுமையே சிறந்தது:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

16:126. (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Sunday, 15 September 2013

பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி...!!



பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. 

இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். 
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. 

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. 

இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்படக் காரணம்: 
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: 
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். 

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும். 

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். 

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

source: 
மருத்துவக் குறிப்பு Health Care in Tamil
https://www.facebook.com/photo.php?fbid=586141244764790&set=a.503551576357091.1073741825.502891103089805&type=1&relevant_count=1

Sunday, 15 September 2013 by Unknown · 0

தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!" என்று கூறுவார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1442.

மேலும் வாசிக்க

by Unknown · 0

Friday, 13 September 2013

பாதை ஒழுக்கம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
"நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி - 2465. 

மேலும் வாசிக்க

Friday, 13 September 2013 by Unknown · 0

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற ...


கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

http://eci-citizenservices.nic.in/default.aspx

அல்லது 
http://www.elections.tn.gov.in/eregistration/E_Registration.aspx
source: http://bakrudeenali.blogspot.in/2013/09/blog-post_11.html

by Unknown · 0

Tuesday, 10 September 2013

எந்த நற்செயல் சிறந்தது?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 



இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே;உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்" என்று விடையளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் - 1832.

மேலும் வாசிக்க

Tuesday, 10 September 2013 by Unknown · 0

Monday, 9 September 2013

நற்செயல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

34:37. இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.

மேலும் வாசிக்க

Monday, 9 September 2013 by Unknown · 0

Sunday, 8 September 2013

சிறப்பான நன்மைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
நூல்: புகாரி - 12.

மேலும் வாசிக்க

Sunday, 8 September 2013 by Unknown · 0

Saturday, 7 September 2013

நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்


நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள

வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

மேலும் வாசிக்க

Saturday, 7 September 2013 by Unknown · 0

Thursday, 5 September 2013

நன்மையைச் செய்யுங்கள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

4:122. மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?

மேலும் வாசிக்க

Thursday, 5 September 2013 by Unknown · 0

Wednesday, 4 September 2013

சின்ன செயல்கள் சிறப்பான நன்மைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1410.

மேலும் வாசிக்க

Wednesday, 4 September 2013 by Unknown · 0

Monday, 2 September 2013

உள்ளங்கள் மாறாதவரை...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  


  இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!    

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் - 5012.

மேலும் வாசிக்க

Monday, 2 September 2013 by Unknown · 0

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program