Wednesday, 14 October 2015

உலக விசயத்திற்காக சண்டையிடுவது ...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

.    இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். 
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று, (போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸாவை முன்னால் வைத்துத் தொழுவது போன்று) தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பருக்கு வந்து, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் அல்லது பூமியின் திறவுகோல்கள்... கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள்.
புகாரி - 1344.

யா அல்லாஹ் ! குப்ரைவிட்டும், வறுமையை விட்டும் கப்ருடைய வேதனையை விட்டும் உன்பால் பாதுகாவல் தேடுகிறோம் ! நல்வழியையும் பயபக்தியையும் , தூய எண்ணங்களையும் செல்வங்களையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் !
உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எங்களுக்கு நீ உதவி செய்தருள்வாயாக!
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ உலக விசயத்திற்காக சண்டையிடுவது ... ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program